கடமை உணர்வுடனான கர்ம யோகம், பற்றற்ற தன்மை மற்றும் இறை உணர்தலுக்கான தியானம் யோகம் என்ற பகவத் கீதையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணரின் செய்தி தான் நவீன யுகத்திற்கும், எந்த யுகத்திற்கும் சரியான பதிலாகும்.
— பரமஹம்ஸ யோகானந்தர்
பகவான் கிருஷ்ணன் அவதரித்த புனித ஜென்மஷ்டமி தினம் உலகெங்கிலும் உள்ள பக்தர்களால் மகிழ்ச்சியுடனும் பக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. அவன் தெய்வீக அன்பின் அவதாரமாக பிரபலமாக போற்றப்பட்டாலும், ஸ்ரீ கிருஷ்ணர் பல பக்தர்களின் இதயங்களில் “யோகப் பெருமான்” என்று பொருள்படும் யோகேஸ்வரராக ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளார்.
அர்ஜுனனை சிறந்த யோகியாகுமாறு (யோக-தியானத்தின் விஞ்ஞான உத்திகளை பயிற்சி செய்தல்) அறிவுறுத்தி, ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார்: “தேகக் கட்டுப்பாட்டை நெறிப்படுத்தும் தவசிகளை விட யோகி மேலானவன். ஞான மார்க்கத்தை அல்லது கர்ம மார்க்கத்தை பின்பற்றுபவர்களையும் விட மேலானவன். ஆகையால் நீ ஒரு யோகி ஆவாயாக!”
இந்த மகத்தான அவதாரத்துடன் நம் மனதையும் இதயங்களையும் இணைக்க ஜென்மாஷ்டமி நமக்கு ஒரு அற்புத வாய்ப்பை வழங்குகிறது. இந்த புனித தினத்தை (இந்த ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி) YSS சன்னியாசி ஒருவர் வழி நடத்திய சிறப்பு ஆன்லைன் தியானத்துடன் நினைவு கூர்ந்தோம்.
பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களிலிருந்து ஜென்மாஷ்டமி 2023 செய்தி
ஜென்மாஷ்டமி தினத்தையொட்டி பரமஹம்ஸ யோகானந்தரின் ஆசிரமங்களில் இருந்து வந்த செய்தியை படிக்க, இந்த இணைப்பைப் பார்வையிடவும்:
இந்த ஆன்லைன் நிகழ்ச்சிக்கு கூடுதலாக, நமது ஆசிரமங்கள், மையங்கள் மற்றும் மண்டலிகளில் பல்வேறு நேரடி நினைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணனின் அமரத்துவ செய்திக்காக அவன் மீதான உங்கள் பக்தி மற்றும் நன்றியின் அடையாளமாக இந்த சந்தர்ப்பத்தில் காணிக்கை செலுத்த விரும்பினால், கீழே உள்ள இணைப்பைப் பார்வையிடவும்.