பிரார்த்தனை வழிபாடு (கால அளவு: 15 - 20 நிமிடங்கள்)
கீழே கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள பிரார்த்தனை வழிபாடு ஒவ்வொரு வாரமும் உலகம் முழுவதும் உள்ள யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா ஆசிரமங்கள், மையங்கள் மற்றும் தியானக் குழுக்களில் நடத்தப்படுகிறது. இது அறிவியல் பூர்வ பிரார்த்தனையின் இரண்டு அடிப்படை அம்சங்களைப் பயன் படுத்துகிறது: எண்ணம் மற்றும் சக்தி. முதலாவதாக, பரிபூரணம் பற்றிய எண்ணங்களும், இறைவனின் உதவியுடன் இசைந்திருத்தலும் தேவைப்படுகின்ற அனைவருக்கும் ஒலிபரப்பு செய்யப்படுகின்றன. பின்னர், பரமஹம்ஸ யோகானந்தர் போதித்த உத்தியைச் செயற்படுத்துவதன் வாயிலாக, உதவி தேவைப்படுவோருக்கு குணப்படுத்தும் சக்தி அனுப்பி வைக்கப்படுகிறது.
- தொடக்கப் பிரார்த்தனை.
- விருப்பப்பட்டால்: பரமஹம்ஸ யோகானந்தரின் நூல்களிலிருந்து ஒரு சுருக்கமான எழுச்சியூட்டும் வாசிப்பு மற்றும் / அல்லது அவரது பிரபஞ்ச கீதங்களிலிருந்து ஒரு கீதமிசைத்தல்.
- சுருக்கமான தியானம். உங்களுக்குத் தெரிந்திருந்தால், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வின் தியான உத்திகளைப் பயிற்சி செய்தவாறு, இறைவனின் குணப்படுத்தும் இருப்புடன் எண்ணங்களை இசைவியுங்கள். பின்னர் பிரார்த்தனை சபையில் உதவி கோரிய அனைவருக்கும் மன ரீதியாக ஆழமாகப் பிரார்த்தனை செய்யுங்கள். கூடுதலாக, நீங்கள் குறிப்பாக உங்கள் அன்புக்குரியவர்களுக்காகவோ அல்லது உங்களுடைய சொந்த இன்னல்களை வெல்வதற்கு தெய்வீக உதவி கோரியோ பிரார்த்தனை செய்யலாம்.
- விருப்பப்பட்டால்: தியான வேளையைத் தொடர்ந்து, விரும்பினால், ஒரு சிறிய சங்கல்பத்தைப் பயன்படுத்தலாம். (பரமஹம்ஸ யோகானந்தரின் ஸையின்டிஃபிக் ஹீலிங் அஃபர்மேஷன்ஸ் என்ற நூலின் 5-ம் அத்தியாயத்தில் அறிவுறுத்தல்கள் காணப்படுகின்றன.)
- பரமஹம்ஸ யோகானந்தர்போதித்த குணப்படுத்தும் உத்தியைப் பயிற்சி செய்யுங்கள்.
- உலக அமைதிக்கான நிறைவுப் பிரார்த்தனை.