கூட்டுத் தியானம் புதிய ஆன்மீக சாதகர்களை, அத்துடன் அனுபவம் வாய்ந்த தியானம் செய்பவர்களையும் பாதுகாக்கும் ஓர் அரண் ஆகும். சேர்ந்து தியானம் செய்வது குழுவில் உள்ள ஒவ்வோர் உறுப்பினரின் ஆன்ம-அனுபூதியின் அளவையும் கூட்டுக் காந்த சக்தியின் கட்புலனாகா அதிர்வுப் பரிமாற்ற விதியின் மூலம் அதிகரிக்கிறது.
—பரமஹம்ஸ யோகானந்தர்
ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான மையத்தை ஜனவர் 31, 2021 அன்று திறந்து வைக்கிறார்.
யோகதா சத்சங்க ஆசிரமம், கேந்திரம் அல்லது மண்டலி ஆகியவற்றில் நேரடியாகப் பங்கு பெறுவதில் பல உணரத்தக்க மற்றும் உணரமுடியாத பலன்கள் உள்ளன, மற்றும் அது சாத்தியமென்றால் ஒவ்வொருவரும் நேரடியாகப் பங்கு பெறுவதை நாங்கள் விரும்புகிறோம். ஆயினும், பல சாதகர்கள் ஓர் ஒய் எஸ் எஸ் மண்டலியிலிருந்து அல்லது கேந்திரத்திலிருந்து வெகு தொலைவில் வசிக்கிறார்கள்—அல்லது மற்ற காரணங்களுக்காக அவர்களால் நேரடியாகப் பங்குகொள்ள முடிவதில்லை. இப்போது எல்லா சாதகர்களுக்கும், அவர்களுடைய இடம் அல்லது சூழ்நிலையைப் பற்றிய கவலையின்றி, கூட்டுத் தியானம், ஏகாந்தவாச நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்காக ஆன்மீகக் கூட்டுறவில் மற்ற உண்மை-நாடும் ஆன்மாக்களுடன் சேர்ந்து இணையும் வாய்ப்பு உள்ளது.
ஓர் ஆன்லைன் தியானத்தில் இணைய பின்வரும் படிகளைப் பின்பற்றுங்கள்:
1. 1. இலவச ஜூம் (Zoom) செயலியைப் பதிவிறக்கம் செய்து கைபேசியிலோ அல்லது கணிணியிலோ உள்ளீடு செய்யுங்கள் (நீங்கள் ஒரு கணக்கை ஆரம்பிக்க வேண்டிய தேவை இல்லை).
2. 2. ஆன்லைன் தியான மற்றும் சிறப்பு நிகழ்ச்சி அட்டவணையை நோட்டமிடுங்கள்..
3. அட்டவணையில் நீங்கள் விரும்பும் நிகழ்ச்சியில் க்ளிக் செய்து, பின் ஜூம் -ஐத் திறந்து தியான அறையில் நுழைய நிகழ்ச்சி விவரத்தில் உள்ள நீல நிற ஜூம் இணைப்பை க்ளிக் செய்யுங்கள்.
நீங்கள் ஓர் ஒய் எஸ் எஸ்/ எஸ் ஆர் எஃப் கிரியாபானாக இருந்து ஓர் ஆன்லைன் தியான வழிநடத்துபவராகவோ அல்லது ஆன்லைன் ஏவலராகவோ ஆவதில் ஆர்வம் கொண்டிருந்தால், தன்னார்வத் தொண்டர் வலைதளத்தில் பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களுடன் குருதேவருக்குச் சேவை செய்ய ஆர்வமாக இருக்கிறோம்.
“அது ஒரு கூட்டுத் தியானத்தின் மெய்யுருவை உண்மையாகப் படம்பிடித்துக் காட்டியது. அது அற்புதமாக இருந்தது. அது நேரடியான கூட்டுத் தியானத்தைப் போலவே இருந்ததைக் கண்டு நான் வியப்புற்றேன்!”
“நான் நம் ஆன்லைன் தியானத்தில் ஒரு சிறந்த அனுபவத்தைப் பெற்றேன். அது நாங்கள் ஒரு குழுவின் ஒரு பகுதியாக இருப்பதைப் போன்ற உணர்வாக மெய்யாகவே இருக்கிறது!”
“வைகறையில் எழுந்து சாதகர்களுடன் அமர்ந்து தியானம் செய்யவும் நேரலைக் கீர்த்தனையைக் கேட்கவும் முடிகின்ற அத்தகைய ஒரு நல்ல உணர்வாக இருந்தது!”
“நான் தியானத்தை நேசித்தேன் மற்றும் என்னால் அவற்றை நாள்தோறும் செய்ய முடிந்தது. நேரம் சிட்டாகப் பறந்தது மற்றும் அது மிகவும் இனிமையாக இருந்தது!”
“நான் அதை மெய்யாகவே அனுபவித்து மகிழ்ந்தேன். என்னால் குழுவின் வலிமையையும் இணைப்பையும் உணர முடிந்தது.”
இதைப் பகிர