“எல்லோருக்கும் அன்பை வழங்குவது, இறைவனின் அன்பை உணருவது, எல்லோரிடமும் அவனுடைய இருப்பைப் பார்ப்பது, மற்றும் ஓர் ஆசையை—உங்கள் உணர்வுநிலை எனும் ஆலயத்தில் அவனுடைய தொடர்ச்சியான இருப்பிற்கான ஆசையை—மட்டுமே வைத்துக் கொள்வது, அதுதான் இவ்வுலகில் வாழும் வழி.”
—ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர்
அன்றாட வாழ்விற்கான வழிகாட்டலும் உத்வேகமும்
யுகயுகங்களாக, மறைஞானிகள், மகான்கள், துறவிகள் மற்றும் யோகிகள் அனைவரும் ஒரே பதிலைத்தான் நமக்கு அளித்துள்ளனர்: இறைவனுடனான ஒரு தனிப்பட்ட உறவை—நமது அன்றாட வாழ்க்கைகளில் பரம்பொருளுடன் நம்மை இணைக்கும் ஒன்றை—வளர்த்துக்கொள்ள. ஆன்மீக வாழ்க்கை அந்த உறவை வளர்க்கும் ஒரு நடைமுறைக்கேற்ற அணுகுமுறை ஆகும்.
ஒவ்வொரு தலைப்பையும் பற்றிய நடைமுறைக்கேற்ற ஆலோசனையுடன் சேர்த்து, ஒவ்வொரு பகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள சங்கல்பங்களையும் பயன்படுத்திக்கொள்ளத் தவறாதீர்கள். ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வுசெய்யப்பட்ட மகிழ்ச்சி, குணமாக்குதல், அமைதி ஆகியவற்றையும் மற்ற ஆன்மீக நன்மைகளையும் நோக்கிச் செல்லும் உங்களுடைய தனிப்பட்ட பயணத்தைத் துவக்க இப்போதே உங்களால் பயிற்சி செய்ய முடியும்.
கூடுதலாக, ஒவ்வொரு தலைப்பும் அதிக ஆழ்ந்த ஆய்விற்குத் தேவையான ஆதாரங்களுக்கான இணைப்புச் சுட்டிகளையும், அத்துடன் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியாவால் வெளியிடப்பட்டுள்ள பல புத்தகங்களில், ஒலி/ காணொலிப் பதிவுகளில், மற்றும் ஏனைய வெளியீடுகளில் அந்தத் தலைப்பின் மீது அதிகமாக எங்கே காணலாம் என்பதற்கான உதவிகரமான ஆலோசனைகளையும் உள்ளடக்கியது.
தலைப்புகள்
- வாழ்வின் நோக்கம்
- நீடித்த மகிழ்ச்சியின் இரகசியங்கள்
- உண்மையான வெற்றியையும் வளத்தையும் அடைவது
- உடல்நலமும் குணமாக்குதலும்
- ஒரு நிலையற்ற உலகில் பாதுகாப்பு
- பிரார்த்தனையின் சக்தியைப் பயன்படுத்துதல்
- உள்ளுணர்வு
- மன்னிப்பு
- சினத்தை வெற்றிகொள்ளுதல்
- அச்சத்தையும் கவலையையும் வெற்றிகொள்ளுதல்
- மற்றவர்களுடனான நமது உறவுகளில் நல்லிணக்கத்தை உருவாக்குதல்
- இறைவனை அறிதல்
- ஒருவருடைய ஆன்மீகத் தேடலில் ஒரு குருவின் பங்கு
- மரணத்தையும் இழப்பையும் புரிந்துகொள்ளுதல்
- இந்தப் பொருளாதார நெருக்கடிக் காலங்களுக்கான வழிகாட்டல்
- தெய்வத்தாயின் முன்னிலையில் வாழ்வது
- எளிமையை இதயத்திற்கு எடுத்துச் செல்லுதல்
- அகமுக ஆய்வு: உங்களுடைய மிக உயர்ந்த செயல்திறனை எப்படி உணர்ந்தறிவது
- பருவகாலத்திற்கான அகத்தூண்டுதல்
- அன்பு: மனித அன்பும் தெய்வீக அன்பும்
- உங்களுடைய உண்மையான சுயத்தை விழித்தெழச் செய்ய அமரத்துவச் சிந்தனைகளைப் பயன்படுத்துவது எப்படி
- இந்தச் சவாலான காலங்களுக்கான ஆன்மீகப் பேரொளி