- இறையனுபவத்தை நேரடியாகத் தனிப்பட்ட முறையில் அடைய உதவும் திட்டவட்டமான விஞ்ஞான முறைகள் பற்றிய அறிவை உலக நாடுகளிடையே பரப்புதல்.
- சொந்த முயற்சியின் மூலம் மனிதனின் வரம்பிற்குட்பட்ட நிலையற்ற உணர்வுநிலையை இறை உணர்வுநிலைக்கு உயர்த்தும் பரிணாம வளர்ச்சியே வாழ்க்கையின் நோக்கம் என்பதைப் போதிப்பது; இந்த நோக்கத்தை நிறைவேற்ற, இறைத்தொடர்பிற்கான யோகதா சத்சங்க ஆலயங்களை நிறுவுவதுடன் மனிதர்களின் இல்லங்களிலும் இதயங்களிலும் இறைவனின் தனிப்பட்ட ஆலயங்களை நிறுவ ஊக்கமளிப்பது.
- பகவான் கிருஷ்ணரால் போதிக்கப்பட்ட மூல யோகத்திற்கும் இயேசு கிறிஸ்துவினால் போதிக்கப்பட்ட மூலக் கிறிஸ்துவத்திற்கும் இடையே உள்ள முழுமையான இணக்கத்தையும் அடிப்படையான ஒத்த தன்மையையும் வெளிப்படுத்துவது; மற்றும் உண்மையின் இந்தத் தத்துவங்களே எல்லா உண்மையான சமயங்களுக்கும் பொதுவான விஞ்ஞானப் பூர்வமான அடித்தளம் என்பதைக் காண்பிப்பது.
- உண்மையான எல்லாச் சமய நம்பிக்கைகளும் முடிவில் இட்டுச் செல்லும் ஒரே தெய்வீகப் பெருவழியைச் சுட்டிக் காண்பிப்பது: நாள்தோறும் விஞ்ஞானப் பூர்வமாக பக்தியுணர்வுடன் இறைவனைத் தியானம் செய்வது எனும் பெருவழி.
- மனிதனை, அவனுடைய மூவடுக்குத் துன்பங்களான உடல் நோய், மனக் கவலைகள், ஆன்மீக அறியாமை ஆகியவற்றிலிருந்து விடுவிப்பது.
- "எளிய வாழ்க்கை மற்றும் உயர்ந்த சிந்தனை"யை ஊக்குவிப்பது; அனைத்து மக்களிடையேயும் அவர்களது ஒற்றுமையின் நிரந்தர ஆதாரத்தை — இறைவனுடன் உள்ள உறவை — போதிப்பதன் மூலம் சகோதரத்துவ உணர்வைப் பரப்புவது.
- உடலை விட மனம் உயர்வானது, மனத்தை விட ஆன்மா உயர்வானது என்பதை எடுத்துக் காட்டுவது.
- நன்மை மூலமாகத் தீமையையும், மகிழ்ச்சியின் மூலமாகத் துயரத்தையும், அன்பின் மூலமாகக் கொடுமையையும், ஞானத்தின் மூலமாக அஞ்ஞானத்தையும் வெல்வது.
- சமயம், விஞ்ஞானம் ஆகிய இரண்டையும் அவற்றின் அடிப்படைச் சித்தாந்தங்களின் ஒற்றுமையைப் புரிந்து கொள்வதன் மூலம் ஒன்றுபடுத்துவது.
- மேலை நாடுகளுக்கும் கீழை நாடுகளுக்கும் இடையே கலாச்சாரம் மற்றும் ஆன்மீக அறிவை ஆதரித்தல், மேலும் அவற்றின் உத்தமத் தனித்தன்மை பொருந்திய குணங்களைப் பரிமாற்றம் செய்து கொள்வது.
- மனித இனத்தைத் தன்னுடைய பெரிய ஆன்மாவாகக் கருதி சேவை செய்வது.