பத்தாவது சர்வதேச யோகா தினம்

யோக தத்துவம் மற்றும் விஞ்ஞானத்திற்கு உலகம் இப்போது ஆண்டுதோறும் மரியாதை செலுத்துகிறது என்பதை அறிந்துகொள்வதில் பரமஹம்ஸர் மிகவும் மகிழ்ச்சியடைவார், ஏனெனில் காலத்தால் அழியாத யோக தியான உத்திகளை மெய்ப்பொருள் நாடும் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதற்கு அவரது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டது. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, யோகம் பற்றிய இன்றைய உலக ஆர்வம் பெருமளவு, நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பரமஹம்ஸ யோகானந்தர் எடுத்துச் சென்ற போதனைகளின் விளைவாகும். “சர்வதேச யோகா தினம் குறித்த இந்தியாவின் யோசனை ஐ.நா. வில் எளிதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்றால், அந்த பெருமை அமெரிக்காவில் இந்தியாவின் முதல் யோக குரு பரமஹம்ஸ யோகானந்தரையே சேரும்” என்று ஒரு ஆன்லைன் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. “ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அமெரிக்காவில் யோகத்திற்கு அடித்தளம் அமைத்ததில் அவர் பெரும் பங்கு வகித்தார்.”

பகவத் கீதையின் (காட் டாக்ஸ் வித் அர்ஜுனா) மிகவும் பாராட்டப்பட்ட மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையில் பரமஹம்ஸ யோகானந்தர் விளக்குகிறார்: “யோகம் என்ற சொல் பரமாத்மாவுடன் மனதை இணைப்பதன் விளைவாக ஏற்படும் பூரண சமநிலை அல்லது மன சமநிலையைக் குறிக்கிறது. பரமாத்வுடன் ஐக்கியம் அடைவத்ற்கான ஆன்மீக தியான உத்திகளையும் கூட யோகம் குறிக்கிறது. மேலும் யோகம் என்பது இந்த தெய்வீக ஐக்கியத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலையும் குறிக்கிறது.

நிகழ்வுகள் பற்றி

ஜூன் 21 ஆம் தேதி வரவிருக்கும் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) உடல், மனம் மற்றும் ஆன்மாவின் நல்வாழ்வை மேம்படுத்த நேரிடை மற்றும் ஆன்லைன் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கிறது.

இந்த நிகழ்வுகளுக்கு குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்து வர உங்களை வரவேற்கிறோம்.

⁠சிறப்பு நிகழ்வு

“யோகா-தியானத்தின் மூலம் சமநிலை மற்றும் அமைதியைக் கண்டறிதல்”

(வழிநடத்தப்படும் தியான நிகழ்ச்சி அடங்கும்)

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 9, 2024
காலை 11:00 முதல் மதியம் 12:00 வரை (IST)

ஜூன் 9, ஞாயிற்றுக்கிழமை, YSS சன்னியாசி சுவாமி சுத்தானந்த கிரி தமிழில் யோகா-தியானம் பற்றிய அறிமுக நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி உண்மையைத் தேடுபவர்களுக்காக அவர்களின் அன்றாட வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் எவ்வாறு அக சமநிலையையும் அமைதியையும் பாதுகாக்க முடியும் என்பதைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது.

பரமஹம்ச யோகானந்தா மற்றும் அவரது போதனைகள் பற்றிய அறிமுகத்துடன் ஆன்லைன் நிகழ்ச்சி தொடங்கும். அதைத் தொடர்ந்து, சரியான அமர்வுநிலை, ஆரம்ப சுவாசப் பயிற்சிகள், சங்கல்பங்கள் மற்றும் மனக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய வழிநடத்தப்படும் தியான நிகழ்வின் மூலம் சுவாமி சுத்தானந்தா பங்கேற்பாளர்களை வழிநடத்துவார்.

தயவு செய்து கவனிக்கவும்: இந்த நிகழ்வு YSS சென்னை ரிட்ரீட்டில் இருந்து நேரலையில் ஒளிபரப்பப்படும், மேலும் பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.

Play Video

அனைத்து ஆன்லைன் நிகழ்வுகளும்

ஜூன் 8 (தெலுங்கு)

“யோகா-தியானத்தின் மூலம் சமநிலை மற்றும் அமைதியைக் கண்டறிதல்”

(வழிநடத்தப்படும் தியான நிகழ்ச்சி அடங்கும்)

ஜூன் 8, 2024 சனிக்கிழமை
மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை (IST)

Play Video

ஜூன் 8, சனிக்கிழமையன்று, YSS சன்னியாசி சுவாமி கேதாரானந்த கிரி தெலுங்கில் யோகா-தியானம் பற்றிய அறிமுக அமர்வை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி உண்மையைத் தேடுபவர்களுக்காக அவர்களின் அன்றாட வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் எவ்வாறு அக சமநிலையையும் அமைதியையும் பாதுகாக்க முடியும் என்பதைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது.

பரமஹம்ச யோகானந்தா மற்றும் அவரது போதனைகள் பற்றிய அறிமுகத்துடன் இந்த ஆன்லைன் நிகழ்வு தொடங்கும். அதைத் தொடர்ந்து, சரியான அமர்வு நிலைப் பயிற்சி, ஆரம்ப சுவாசப் பயிற்சிகள், சங்கல்பங்கள் மற்றும் மனக்காட்சிப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய தியான நிகழ்ச்சி மூலம் பங்கேற்பாளர்களை சுவாமி கேதாரனந்தா வழிநடத்துவார்.

தயவு செய்து கவனிக்கவும்: இந்த நிகழ்வு YSS தக்ஷினேஷ்வர் ஆசிரமத்தில் இருந்து நேரலையில் ஒளிபரப்பப்படும், பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.

ஜூன் 9 (தமிழ்)

“யோகா-தியானத்தின் மூலம் சமநிலை மற்றும் அமைதியைக் கண்டறிதல்”

(வழிநடத்தப்படும் தியான நிகழ்ச்சி அடங்கும்)

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 9, 2024
காலை 11:00 முதல் மதியம் 12:00 வரை (IST)

Play Video

ஜூன் 9, ஞாயிற்றுக்கிழமை, YSS சன்னியாசி சுவாமி சுத்தானந்த கிரி தமிழில் யோகா-தியானம் பற்றிய அறிமுக நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி உண்மையைத் தேடுபவர்களுக்காக அவர்களின் அன்றாட வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் எவ்வாறு அக சமநிலையையும் அமைதியையும் பாதுகாக்க முடியும் என்பதைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது.

பரமஹம்ச யோகானந்தா மற்றும் அவரது போதனைகள் பற்றிய அறிமுகத்துடன் ஆன்லைன் நிகழ்ச்சி தொடங்கும். அதைத் தொடர்ந்து, சரியான அமர்வுநிலை, ஆரம்ப சுவாசப் பயிற்சிகள், சங்கல்பங்கள் மற்றும் மனக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய வழிநடத்தப்படும் தியான நிகழ்வின் மூலம் சுவாமி சுத்தானந்தா பங்கேற்பாளர்களை வழிநடத்துவார்.

தயவு செய்து கவனிக்கவும்: இந்த நிகழ்வு YSS சென்னை ரிட்ரீட்டில் இருந்து நேரலையில் ஒளிபரப்பப்படும், மேலும் பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.

ஜூன் 9 (கன்னடம்)

“யோகா-தியானத்தின் மூலம் சமநிலை மற்றும் அமைதியைக் கண்டறிதல்”

(வழி நடத்தப்படும் தியான நிகழ்ச்சி அடங்கும்)

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 9, 2024
மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை (IST)

Play Video

ஜூன் 9, ஞாயிற்றுக்கிழமை, YSS சன்னியாசி சுவாமி ஸ்ரேயானந்தா கிரி கன்னடத்தில் யோகா-தியானம் பற்றிய அறிமுக நிகழ்வை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி உண்மையைத் தேடுபவர்களுக்காக அவர்களின் அன்றாட வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் எவ்வாறு அக சமநிலையையும் அமைதியையும் பாதுகாக்க முடியும் என்பதைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது.

பரமஹம்ச யோகானந்தா மற்றும் அவரது போதனைகள் பற்றிய அறிமுகத்துடன் ஆன்லைன் நிகழ்வு தொடங்கும். அதைத் தொடர்ந்து, சரியான அமர்வுநிலை பயிற்சி, ஆரம்ப சுவாசப் பயிற்சிகள், சங்கல்பங்கள் மற்றும் மனக்காட்சிப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய வழிநடத்தப்படும் தியான நிகழ்ச்சி மூலம் பங்கேற்பாளர்களை சுவாமி ஷ்ரேயானந்தா வழிநடத்துவார்.

தயவு செய்து கவனிக்கவும்: இந்த நிகழ்வு YSS ராஞ்சி ஆசிரமத்தில் இருந்து நேரலையில் ஒளிபரப்பப்படும், பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.

ஜூன் 15 (ஆங்கிலம்)

“யோகா-தியானத்தின் மூலம் சமநிலை மற்றும் அமைதியைக் கண்டறிதல்”

(வழிநடத்தப்படும் தியான நிகழ்ச்சி அடங்கும்)

ஜூன் 15, 2024 சனிக்கிழமை
மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை (IST)

Play Video

ஜூன் 15, சனிக்கிழமை, YSS சன்னியாசி சுவாமி லலிதானந்த கிரி ஆங்கிலத்தில் யோகா-தியானம் பற்றிய அறிமுக நிகழ்வை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி உண்மையைத் தேடுபவர்களுக்காக அவர்களின் அன்றாட வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் எவ்வாறு அக சமநிலையையும், அமைதியையும் பாதுகாக்க முடியும் என்பதைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது.

பரமஹம்ச யோகானந்தா மற்றும் அவரது போதனைகள் பற்றிய அறிமுகத்துடன் ஆன்லைன் திட்டம் தொடங்கும். அதைத் தொடர்ந்து, சரியான அமர்வு நிலை பயிற்சி, ஆரம்ப சுவாசப் பயிற்சிகள், சங்கல்பங்கள் மற்றும் மனக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய வழிநடத்தப்பட்ட தியான நிகழ்வின் மூலம் சுவாமி லலிதானந்தா பங்கேற்பாளர்களை வழிநடத்துவார்.

தயவு செய்து கவனிக்கவும்: இந்த நிகழ்வு YSS நொய்டா ஆசிரமத்தில் இருந்து நேரலையில் ஒளிபரப்பப்படும் மேலும் பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.

ஜூன் 16 (ஹிந்தி)

“யோகா-தியானத்தின் மூலம் சமநிலை மற்றும் அமைதியைக் கண்டறிதல்”

(வழிநடத்தப்படும் தியான நிகழ்ச்சி அடங்கும்)

ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 16, 2024
காலை 11:00 முதல் மதியம் 12:00 வரை (IST)

Play Video

ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை, YSS சன்னியாசி சுவாமி ஈஸ்வரானந்த கிரி இந்தியில் யோகா-தியானம் பற்றிய அறிமுக நிகழ்வை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சி உண்மையைத் தேடுபவர்களுக்காக அவர்களின் அன்றாட வாழ்வின் எல்லாச் சூழ்நிலைகளிலும் எவ்வாறு அக சமநிலையையும், அமைதியையும் பாதுகாக்க முடியும் என்பதைக் கண்டறிய வடிவமைக்கப்பட்டுள்ளது.

பரமஹம்ச யோகானந்தா மற்றும் அவரது போதனைகள் பற்றிய அறிமுகத்துடன் ஆன்லைன் நிகழ்வு தொடங்கும். அதைத் தொடர்ந்து, சுவாமி ஈஸ்வரானந்தா அவர்கள் சரியான அமர்வு நிலை பயிற்சி, ஆரம்ப சுவாசப் பயிற்சிகள், சங்கல்பங்கள் மற்றும் மனக் காட்சிப்படுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய தியான நிகழ்வின் மூலம் பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டுவார்.

தயவு செய்து கவனிக்கவும்: இந்த நிகழ்வு YSS ராஞ்சி ஆசிரமத்தில் இருந்து நேரலையில் ஒளிபரப்பப்படும், பின்னர் பார்ப்பதற்கும் கிடைக்கும்.

நேரில் நடத்தப்படும் நிகழ்வுகள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, YSS மையங்கள் மற்றும் மண்டலிகளும் சிறப்பு நிகழ்வுகளை நேரில் நடத்த உள்ளனர். நிகழ்ச்சி அட்டவணை, இடம் மற்றும் இதர தொடர்புடைய தகவல்களைப் பற்றி மேலும் அறிய, கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டனைக் கிளிக் செய்யுங்கள்.

ஒரு யோகியின் சுயசரிதம் E-புத்தகத்தின் சிறப்புச் சலுகை

இந்த சந்தர்ப்பத்தில், ஆன்மீக உன்னதமான ஒரு யோகியின் சுயசரிதம் (ஆங்கிலம் மற்றும் ஆறு இந்திய மொழிகளில் கிடைக்கிறது) E-புத்தக நகலை இலவசமாக வழங்குகிறோம். இந்தச் சலுகையைப் பெற, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.


ஒரு யோகியின் சுயசரிதம்– E-புத்தகம் 

இலவசமாகப் பெறுங்கள்

ஜூன் 23, 2024 வரை மட்டுமே செல்லுபடியாகும்

ஜூன் 23, 2024 வரை மட்டுமே செல்லுபடியாகும்

பரமஹம்ஸ யோகானந்தர் பற்றி

Founder Paramahansa Yoganandaபரமஹம்ஸ யோகானந்தர் தனது விரிவான போதனைகளால் லட்சக் கணக்கானவர்கள் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். “மேற்கில் யோகத்தின் தந்தை” என்று பரவலாகக் கருதப்படும் பரமஹம்ஸர், விஞ்ஞான முறை பிராணாயாம (உயிர் சக்தி கட்டுப்பாடு) உத்திகளைக் கொண்ட உலகளாவிய போதனைகளை முதன்முதலில் வழங்கினார். யோகத்தின் இறுதி இலக்கு, தன்னை எல்லாம் அறிந்த, எங்கும் நிறைந்த ஆன்மாவாக உணர்வதே ஆகும். யோகானந்தரின் திட்டம் – யோகதா சத்சங்க பாடங்களில் விவரிக்கப்பட்டுள்ளது – சமயத்தின் இந்த உள்ளார்ந்த அடிப்படைக்கு ஒரு நடைமுறை அணுகுமுறையை வழங்குகிறது. மேலும் இது ஹத யோகத்தின் சரீர ரீதியான நன்மைகளில் ஆர்வமுள்ளவர்களை மட்டுமல்லாமல், தங்கள் மன திறன்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக, தங்களை ஆன்மீக ரீதியாக மேம்படுத்திக் கொள்ள ஆர்வமுள்ள அதிக மக்களையும் ஈர்க்கும் ஒரு அமைப்பாகும். 

அவரது போதனைகள் மற்றும் அவர் கற்பித்த தியான உத்திகள் இன்று கீழே காண்பவைகள் மூலம் கிடைக்கின்றன:

மற்றவர்கள் கூறியவை

யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா பற்றி

Main Building of Ranchi Ashramகடந்த 100 ஆண்டுகளாக, யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) அதன் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரின் ஆன்மீக மற்றும் மனிதாபிமான பணிகளை மேற்கொள்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

பரமஹம்ஸ யோகானந்தர், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் தோன்றிய புனித ஆன்மீக விஞ்ஞானமாகிய கிரியா யோகத்தின் உலகளாவிய போதனைகளை கிடைக்கச் செய்வதற்காக 1917 இல் யோகதா சத்சங்க சொஸைடியை நிறுவினார். இந்த சமய சார்பற்ற போதனைகள் முழுமையான வெற்றி மற்றும் நல்வாழ்வை அடைவதற்கான ஒரு முழுமையான தத்துவம் மற்றும் வாழ்க்கை முறையையும், அத்துடன் பரம்பொருளுடன் (இறைவன்) ஆன்மத்தின் ஐக்கியம் என்ற வாழ்க்கையின் இறுதி இலக்கை அடைவதற்கான தியான முறைகளையும் உள்ளடக்கியது

பகவத் கீதையின் (காட் டாக்ஸ் வித் அர்ஜுனா) மிகவும் பாராட்டப்பட்ட மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரையில் பரமஹம்ஸ யோகானந்தர் விளக்குகிறார்: “யோகம் என்ற சொல் பரமாத்மாவுடன் மனதை இணைப்பதன் விளைவாக ஏற்படும் பூரண சமநிலை அல்லது மன சமநிலையைக் குறிக்கிறது. பரமாத்வுடன் ஐக்கியம் அடைவத்ற்கான ஆன்மீக தியான உத்திகளையும் கூட யோகம் குறிக்கிறது. மேலும் யோகம் என்பது இந்த தெய்வீக ஐக்கியத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு செயலையும் குறிக்கிறது.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர