பாபாஜியின் பெயரை பயபக்தியுடன் எவரேனும் உச்சரிக்கும் போதெல்லாம், அந்த பக்தன் உடனடி ஆன்மீக அருளாசிகளை ஈர்க்கிறான்.
— லாஹிரி மகாசயர்
இந்த யுகத்தில் இழந்த விஞ்ஞான தியான உத்தியான கிரியா யோகத்தை மீட்டெடுத்த மகாவதார் பாபாஜியை ஜூலை 25 அன்று நாம் நினைவு கூர்ந்து போற்றுகிறோம்.
1920 ஆம் ஆண்டில் இதே நாளில், அமெரிக்கா புறப்படுவதற்குச் சற்று முன்பு, மகாவதார் பாபாஜி கல்கத்தாவில் உள்ள யோகானந்தரின் இல்லத்திற்கு வந்தார். இளம் யோகானந்தர் தான் மேற்கொள்ளவிருக்கும் பணி குறித்து தெய்வீக உத்தரவாதத்திற்காக ஆழ்ந்த பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்; மகாவதார் பாபாஜி அவரிடம்
“உன்னுடைய குருவின் கட்டளைப்படி நீ அமெரிக்கா செல்வாய், பயப்படாதே, நீ பாதுகாக்கப்படுவாய். மேலை நாடுகளில் கிரியா யோக முறைகளைப் பரப்ப நான் உன்னைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறேன்.” என்று கூறினார்.
இந்த சந்திப்பை மகாவதார பாபாஜி ஸ்மிருதி திவஸ் என்று யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (YSS) நினைவு கூர்கிறது. மகாவதார பாபாஜியை போற்றும் வகையில் இந்த சிறப்பு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக YSS சன்னியாசி ஒருவரால் ஆன்லைன் தியானம் வழிநடத்தப்பட்டது.
நீங்கள் இவற்றையும் படிக்க விரும்பலாம்:
இந்த புனித தருணத்தில் நீங்கள் வழக்கமான காணிக்கை சமர்ப்பிக்க விரும்பினால், கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்.