தனது சீடர்களுக்கு, பரமஹம்ஸ யோகானந்தர், எல்லாவற்றிற்கும் மேலாக, பிரேமாவதாரம், ஒப்பற்ற தெய்வீக அன்பின் அவதாரம், ஓர் ஒப்பற்ற பக்தர், என்று அறியப்பட்டார். அவரது பண்பில் மிக உயர்ந்து விளங்குவது தெய்வ அன்னையாக இறைவனைப் போற்றி வழிபடும் அவருடைய பேரளவிலான அன்புதான்.
— ஸ்ரீ தயா மாதா
ஜனவரி 5, 2024, நமது அன்புக்குரிய குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் 131 வது அவதார தினமாகும். இந்த இனிய தருணத்தில், ஆங்கிலத்தில் தியானம் மற்றும் ஆன்மீக சொற்பொழிவு உள்ளிட்ட சிறப்பு நினைவு நிகழ்ச்சி ஜனவரி 5, 2024 வெள்ளிக்கிழமை காலை மணி 6:30 முதல் 8:30 வரை (IST) YSS சன்னியாசி ஒருவரால் வழிநடத்தப்பட்டது.
YSS ஆசிரமங்கள் மற்றும் மையங்கள் இந்த சமயத்தில் நேரடி ஜன்மோத்ஸவ் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தன.
இந்த சிறப்பு தருணத்தில், கிரியா யோக போதனைகளின் அவரது ஆன்மீக பாரம்பரியத்திற்கு நம் நன்றியை தெரிவிக்கும் விதமாக குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தருக்கு மரியாதை செலுத்துவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. உங்கள் மதிப்புமிக்க நன்கொடை நமது புனித குருவின் ஆன்ம-அனுபூதிக்கான போதனைகளை ஊக்குவிக்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும்.
நன்கொடை அளிக்க கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்: