மனதையும் உடலையும் குணப்படுத்தும் சங்கல்பத்தின் ஆற்றலை மனிதகுலம் கண்டறிவதற்கு பல தசாப்தங்களுக்கு முன்பே பரமஹம்ஸ யோகானந்தர், ஒவ்வொரு மனிதனிலும் உள்ளார்ந்திருக்கும் அற்புதமான குணப்படுத்தும் சக்திகளை எவ்வாறு நேரடியாக அணுகி பயன்படுத்துவது என்பதை அமெரிக்கா முழுவதும் உள்ள ஆர்வமுள்ள பார்வையாளர்களுக்கு கற்பித்தார்.
1924 ஆம் ஆண்டு தனது விஞ்ஞானரீதியான குணப்படுத்தும் சங்கல்பங்கள் என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் சங்கல்பங்களை பரமஹம்ஸர் முதன்முதலில் இயற்றி நூறு ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்த வீடியோவில் YSS/SRF தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி, பரமஹம்ஸ யோகானந்தர் அருளிய ஒரு யோகியின் சுயசரிதம் மற்றும் பிற படைப்புகளின் பதிப்பாசிரியராக 1971-இல் அவரின் மறைவு வரை பணியாற்றிய ஒரு மேம்பட்ட கிரியா யோக சீடரான தாரா மாதா கூறிய இந்நூலின் தோற்றம் பற்றிய கதையைப் பகிர்ந்து கொள்கிறார். ஸ்வாமி சிதானந்தஜி பின்னர் பரமஹம்ஸரின் சங்கல்பங்களை நம் வாழ்க்கையில் வெவ்வேறு வடிவங்களில் இணைப்பதன் மிக சக்திவாய்ந்த விளைவை, அதனை உணர்ந்தறிய ஒரு வழிநடத்தப்பட்ட தியானம் நடத்துவதற்கு முன்பாக விவரிக்கிறார்.
ஸ்வாமி சிதானந்தா அவர்களின் உரை SRF பே ஏரியா ஆலய அர்ப்பணிப்பு நிகழ்ச்சிக்காக இருந்தாலும், பிரபஞ்ச கீதங்கள், சங்கல்பங்கள் மற்றும் பிரார்த்தனைகளைப் பயன்படுத்துவது குறித்த அவரது ஊக்கமளிக்கும் நுண்ணறிவுகளை நாம் அனைவரும் பயன்படுத்தலாம்; மேலும் அவர் நடத்தும் வழிநடத்தப்படும் தியானம் , அதன் மேம்படுத்தும் பலனை உடனடியாக உணர நமக்கு உதவும்.
மே 20, 2023 அன்று நடைபெற்ற SRF பே ஏரியா ஆலய அர்ப்பணிப்பு நிகழ்ச்சியின் முழு வீடியோவை SRF வலைப்பதிவில் காணலாம்.
இந்த வீடியோவில் ஸ்வாமி சிதானந்தஜி ஆன்மீகமயமாக்கப்பட்ட சங்கல்பங்கள், பிரார்த்தனைகள் மற்றும் கீதங்களை வழங்கும் பரமஹம்ஸ யோகானந்தரின் மூன்று படைப்புகளைக் குறிப்பிடுகிறார், இறைவனுடனான ஆழ்ந்த உரையாடலின் போது பரமஹம்ஸருக்கு ஏற்பட்ட அதே அனுபவத்தை உங்களுக்குள் எழுப்ப அவற்றை பயன்படுத்தலாம். இந்த மூன்று புத்தகங்களும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா-வில் கிடைக்கின்றன: