தயவுசெய்து கீழே உள்ள பக்கத்தில் எங்கள் விரிவான அறிவிப்புகளைப் படிக்கவும். தற்போதைய நிலை மற்றும் சேவைகளின் சுருக்கம் பின்வருமாறு:
புதுப்பிப்பு: மே 16, 2022
ராஞ்சி, தக்ஷிணேஷ்வர், துவாரஹட் மற்றும் நொய்டா ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களில் இப்போது தங்கும் வசதி வழங்கப்படுகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் தங்குவதற்கு முன்பதிவு செய்ய, தயவுசெய்து இந்த ஆசிரமங்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்.
அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.
கிடைக்கக்கூடிய ஆன்லைன் சேவைகள்
பின்வருவனவற்றில் கலந்துகொண்டு பயனடையுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம்:
- ஆன்லைன் கூட்டுத் தியானங்கள் (ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் வழி நடத்தும் தியானங்கள் உட்பட)
- வாராந்திர ஆன்லைன் உத்வேகமளிக்கும் சொற்பொழிவு
- ஆங்கில வழி பாட மாணவர்கள் ஒய் எஸ் எஸ் பாடங்கள் செயலி மூலம் பாடங்களைப் படிக்கலாம். மறு அறிவிப்பு வரும் வரை அனைவருக்கும் அன்பளிப்பு முறையில் அணுகல் நீட்டிக்கப்பட்டுள்ளது
- எங்கள் ஆன்லைன் புக் ஸ்டோர் இல் மின் புத்தகங்கள் மற்றும் ஆடியோ புத்தகங்களைப் பெறுங்கள் (சில ஆடியோ புத்தகங்கள் கட்டணம் ஏதுமின்றி பதிவிறக்கத்திற்கு கிடைக்கின்றன)
- தேவைப்பட்டால், தொலைபேசி மூலம் சன்னியாசிகள் ஆலோசனையைக் கோரவும்
- நன்கொடை அளிக்க விரும்புவோர் எங்கள் வலைத்தளம் அல்லது பக்தர் போர்டல் வழியாக ஆன்லைனில் வழங்கலாம்
- எப்படி வாழ வேண்டும் ஞானம், வழிகாட்டப்பட்ட தியானங்கள், போன்ற பல உத்வேகமளிக்கும் உள்ளடக்கம்
ஆங்கிலத்தில் யோகதா சத்சங்க பாடங்களுக்கு இதுவரை பதிவு செய்யாதவர்கள் எங்கள் ஆன்லைன் விண்ணப்பப் படிவம் மூலம் பதிவு செய்யலாம். விண்ணப்பம் செயலாக்கப்பட்டவுடனேயே அவற்றை ஒய் எஸ் எஸ் பாடங்களைப் பயன்பாட்டு டிஜிட்டல் முறையில் பெறத் தொடங்குவீர்கள்.
புதுப்பிப்பு: மார்ச் 31, 2022
- ஒய் எஸ் எஸ் (YSS) ஆசிரமங்கள், கேந்திரங்கள், மண்டலிகள் மற்றும் ஏகாந்த வாசஸ் தலங்களில் குழு தியானங்கள் இப்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. அனைவரையும் வரவேற்கிறோம்.
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், பக்தர்கள் YSS ராஞ்சி உதவி மையத்தை helpdesk@yssi.org என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி +91 (651) 6655 555மூலமாகவோ (திங்கள்-சனி: காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை) தொடர்பு கொள்ளலாம்.
புதுப்பிப்பு: ஜனவரி 15, 2021
ஹரித்வார் கும்ப மேளா – 2021
- தற்போதைய தொற்றுநோய் சூழ்நிலை காரணமாக 2021 ஆம் ஆண்டு நடைபெறும் இந்த கும்பமேளாவில் ஒரு முகாமை நடத்த ஒய் எஸ் எஸ் திட்டமிடவில்லை.
புதுப்பிப்பு: செப்டம்பர் 5, 2020
- டிசம்பர் வரை அனைத்து சாதனா சங்கங்கள் மற்றும் சன்னியாசிகளின் சுற்றுப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதுப்பிப்பு: ஜூன் 15, 2020
- செப்டம்பர் இறுதி வரை அனைத்து சாதனா சங்கங்கள் மற்றும் சன்னியாசிகளின் சுற்றுப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதுப்பிப்பு: ஏப்ரல் 15, 2020
அரசாங்கம் பணிமுடக்கத்தை நீட்டித்ததன் காரணமாக, முன்னர் அறிவிக்கப்பட்ட அனைத்து ரத்துகளும் இப்போது மறு அறிவிப்பு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. எனவே, மறு அறிவிப்பு வரும் வரை:
- ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள், கேந்திரங்கள், மண்டலிகள் மற்றும் அகஓய்வு தியான மையங்களில் அனைத்து குழு நடவடிக்கைகளும் நடைபெறாது.
- சாதனா சங்கங்கள் (மே), சன்னியாசிகளின் சுற்றுப்பயணங்கள் மற்றும் எகாந்த வாச தியானங்கள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் மே 10 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. மே 10க்குப் பிறகு நடைபெறும் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்.
- ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள் மற்றும் எகாந்த வாச தியான மையங்களுக்குச் சென்று தங்குவதற்காக பக்தர்கள் தாங்கள் செய்த பயணத் திட்டங்களை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
srfonlinemeditation.org இல் உள்ள ஆன்லைன் குழு தியானங்களில் பக்தர்கள் தொடர்ந்து பங்கேற்கலாம், அங்கு YSS துறவிகள் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நீண்ட தியானத்தையும் (காலை 6:10 முதல் 9:30 IST வரை) திங்கள் மற்றும் வியாழன்களில் மாலை தியானங்களையும் நடத்துவார்கள். (மாலை 5.10 முதல் 6.30 வரை). மேலும் அறிய இங்கே கிளிக் செய்யவும் .
ஏப்ரல் 16, 2020 அன்று தியான அமர்வு இந்தியில் நடத்தப்படும். தொடக்க மற்றும் நிறைவு பிரார்த்தனை மற்றும் குணப்படுத்தும் சேவை ஆகியவை இந்தியில் இருக்கும், வாசிப்பு மற்றும் கீதமிசைத்தல் இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் இருக்கும்.
புதுப்பிப்பு: ஏப்ரல் 6, 2020
மே 10 வரை நிகழ்வுகள் ரத்து: மே 10 வரையிலான அனைத்து ஒய் எஸ் எஸ் சன்னியாசிகளின் சுற்றுப்பயணங்கள் மற்றும் எகாந்தவாச தியானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். சிம்லாவில் சாதனா சங்கம், கேரளாவுக்கான சன்னியாசிகளின் சுற்றுப்பயணம் மற்றும் நொய்டா ஆசிரமத்தில் நடைபெற இருந்த ஏகாந்தவாச தியானம் ஆகியவை இதில் அடங்கும்.
புதுப்பிப்பு: ஏப்ரல் 2, 2020
YSS பாடங்கள் டிஜிட்டல் வடிவத்தில் மட்டுமே கிடைக்கும்
ஜார்கண்ட் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பிற மாநிலங்களில் பணிமுடக்கம் விளைவாக, யோகதா சத்சங்க பாடங்கள் மற்றும் பிற நூல் வெளியீடுகள் மற்றும் தயாரிப்புகள் உட்பட எந்த அச்சிடப்பட்ட அஞ்சல்களையும் எங்களால் தற்காலிகமாக அனுப்ப முடியவில்லை. எனினும், இந்த காலகட்டத்தில், நாம் ஆங்கில மொழி பதிப்பை ஆப்பிள் (IOS) மற்றும் ஆன்ட்ராய்டு கருவிகளில் ஒரு உரிமையுடைய பயன்பாட்டு சாதனம் டிஜிட்டல் வடிவத்தில் ஒய் எஸ் எஸ் மாணவர்களுக்கு வழங்குவதைத் தொடர்கிறோம்.
இதன் பொருள், எங்களின் வழக்கமான அட்டவணையின்படி நீங்கள் புதிய பாடங்களைப் பெற முடியும், மேலும் உங்கள் டிஜிட்டல் சாதனத்தில் அவற்றைப் படிக்கவும் கற்கவும் முடியும். ஒவ்வொரு பாடத்திலும் இருக்கும் மதிப்புமிக்க துணைப் பாடங்களை நீங்கள் அணுகவும் முடியும்.
நீங்கள் டிஜிட்டல் வடிவில் பெற்றிருக்கும் அனைத்து பாடங்களும், நாங்கள் அஞ்சல்களை மீண்டும் தொடங்கும் போது, அச்சிடப்பட்ட வடிவத்தில் உங்களுக்கு அனுப்பப்படும். சாதாரண சூழ்நிலைகளில், ஆன்மீகப் படிப்பின் உங்களது முதன்மை ஆதாரமாக பாடங்களின் அச்சிடப்பட்ட பதிப்பைப் பயன்படுத்துமாறு உங்களை ஊக்குவிக்கிறோம். ஆனால், டிஜிட்டல் சாதனம் தற்காலிக பணிநிறுத்தத்தின் போதும் நீங்கள் பாடங்களைப் பெறுவதை சாத்தியமாக்கியதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
இந்த சவாலான நேரத்தில் உங்கள் புரிதலையும் ஒத்துழைப்பையும் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். எங்கள் பிரார்த்தனைகளில் நாங்கள் உங்களைத் இணைத்திருக்கிறோம் என்பதையும், இறைவனும் மகான்களும் தங்களது என்றுமுள்ள தெய்வீக அன்பு மற்றும் பாதுகாப்புடன் உங்களைச் சூழ்ந்துள்ளனர் என்பதையும் தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள்.
YSS பாடங்களுக்கான விண்ணப்பங்கள் இன்னும் செயலாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன
இந்த நேரத்தில் அச்சிடப்பட்ட அஞ்சல்களை எங்களால் அனுப்ப முடியவில்லை என்றாலும், YSS பாடங்களுக்கான, புதிய விண்ணப்பங்களை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம், மேலும் நீங்கள் விண்ணப்பிக்க வரவேற்கிறோம். அச்சிடப்பட்ட பாடங்கள் மீண்டும் அஞ்சல் மூலம் அனுப்பப்பட முடிகின்ற உடனேயே நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம். இருப்பினும், மேலே குறிப்பிட்டுள்ளபடி, இந்த காலகட்டத்தில், ஆங்கில பாடங்களை மாணவர்கள் YSS பாடங்கள் பயன்பாட்டு சாதனத்தில் படிக்க முடியும். பாடங்களை மாணவர்கள் படிப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிய பாடங்கள் பயன்பாட்டடு சாதனத்தில் திறக்கப்படும்.
புதுப்பிப்பு: மார்ச் 26, 2020
YSS பாடங்கள் அஞ்சல்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன
ஜார்கண்ட் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பிற மாநிலங்களில் பணிமுடக்கம் விளைவாக, யோகதா சத்சங்க பாடங்கள் மற்றும் பிற நூல் வெளியீடுகள் மற்றும் தயாரிப்புகள் – என எந்த அஞ்சல்களையும் எங்களால் தாற்காலிகமாக அனுப்ப முடியவில்லை. பாடங்களுக்கான உங்கள் தற்போதைய சந்தா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, மேலும் எங்கள் செயல்பாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்பியதும் மீண்டும் தொடங்கும் அஞ்சல்களை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்குகிறோம்.
இந்தச் சூழ்நிலைக்கான குறுகிய காலத் தீர்வுகளை நாங்கள் தற்போது ஆராய்ந்து வருகிறோம், உங்கள் தேவைகளை எவ்வாறு ஈடு செய்வது என்பது பற்றிய தெளிவான யோசனை எங்களுக்குக் கிடைத்தவுடன் மாற்று வழிகளை அறிவிப்போம். இடைப்பட்ட காலத்தில், நீங்கள் ஏற்கனவே பெற்றுள்ள பாடங்களை மறுபார்வை செய்யவும் , YSS தியானயுத்திகளைப் பயிற்சி செய்யவும், இறைவனுடனான உங்கள் தனிப்பட்ட உறவை ஆழப்படுத்தவும் இந்த நேரத்தைப் பயன்படுத்துமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். YSS enews லெட்டருக்கு நீங்கள் ஏற்கனவே சந்தாதாரர் ஆகவில்லை எனில், சந்தாதாரர் ஆகுமாறு, நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம்.
இந்த சவாலான நேரத்தில் உங்கள் புரிதலையும் ஒத்துழைப்பையும் நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். எங்கள் பிரார்த்தனைகளில் நாங்கள் உங்களை இணைத்திருக்கிறோம் என்பதையும், இறைவனும் மகான்களும் தங்களது என்றுமுள்ள தெய்வீக அன்பு மற்றும் பாதுகாப்பால் உங்களைச் சூழ்ந்துள்ளனர் என்பதையும் தயவுசெய்து அறிந்து கொள்ளுங்கள்.
YSS பாடங்களுக்கான விண்ணப்பங்கள் இன்னும் செயலாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் அச்சிடப்பட்ட அஞ்சல்களை எங்களால் அனுப்ப முடியவில்லை என்றாலும், YSS பாடங்களுக்கான, புதிய விண்ணப்பங்களை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம், மேலும் நீங்கள் விண்ணப்பிக்க வரவேற்கிறோம். அச்சிடப்பட்ட பாடங்கள் மீண்டும் அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டவுடன் நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம்.
புதுப்பிப்பு: மார்ச் 18, 2020
கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருவதன் காரணமாக, முன்னர் அறிவிக்கப்பட்ட அனைத்து ரத்துகளும் ஏப்ரல் 20, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. எனவே, ஏப்ரல் 20, 2020 வரை:
- YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள், மண்டலிகள் மற்றும் அகஓய்வு தியான மையங்களில் அனைத்து குழு நடவடிக்கைகளும் நடைபெறாது.
- சாதனா சங்கங்கள் (ஏப்ரல்), சன்னியாசச் சுற்றுப்பயணங்கள் மற்றும் எகாந்த வாச தியானங்கள் உட்பட அனைத்து நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- ஒய் எஸ் எஸ் ஆசிரமங்கள் மற்றும் அகஓய்வு தியான மையங்களுக்குச் சென்று தங்குவதற்கு பக்தர்கள் தாங்கள் செய்த பயணத் திட்டங்களை ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
srfonlinemeditation.org இல் உள்ள ஆன்லைன் குழு தியானங்களில் பக்தர்கள் தொடர்ந்து பங்கேற்கலாம், அங்கு YSS சன்னியாசிகள் திங்கள் மற்றும் வியாழன்களில் மாலை அமர்வுகளை வழிநடத்துவார்கள் (இந்திய நேரப்படி மாலை 5:10 முதல் மாலை 6:30 வரை). மேலும் அறிய இங்கே இங்கே கிளிக் செய்யவும் .
புதுப்பிப்பு: மார்ச் 5, 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் பகுதியில் உள்ள பொது சுகாதார நிபுணர்களை நாங்கள் கலந்தாலோசித்துள்ளோம், மேலும் அத்தியாவசியமற்ற அனைத்து கூட்டங்களையும் இடைநிறுத்துமாறு அவர்கள் கடுமையாக அறிவுறுத்தியுள்ளனர். அவர்களின் ஆலோசனையை மனதில் கொண்டு, மிகுந்த எச்சரிக்கையுடனும் அக்கறையுடனும், பின்வரும் முடிவுகளை உங்களுக்குத் தெரிவிப்பதில் நாங்கள் மிகவும் வருந்துகிறோம், இது உடனடியாக நடைமுறைக்கு வரும் மற்றும் மறு அறிவிப்பு வரும் வரை செயல்படும்:
- YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள், மண்டலிகள் மற்றும் ஏகாந்த வாச தியான மையங்களில் அனைத்து குழு தியானங்கள், சத்சங்கங்கள் மற்றும் பிற குழு நடவடிக்கைகள் நடைபெறாது. இருப்பினும் ஆன்லைன் குழு தியானங்களில் பங்கேற்க பக்தர்களை ஊக்குவிக்கிறோம். சேவைகளின் அட்டவணை SRF ஆன்லைன் தியான மைய இணையதளத்தில் கிடைக்கிறது - srfonlinemeditation.org/calendar
- நமது குருதேவர் பரமஹம்ஸ யோகானந்தரின் (மார்ச் 7) மகாசமாதி ஆண்டு நிறைவு மற்றும் நமது பரமகுரு ஸ்வாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரி (மார்ச் 9) மகாசமாதி ஆண்டுநிறைவு ஆகியவற்றின் சிறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சிகள் மற்றும் மார்ச் மாதத்தின் ஞாயிறு சத்சங்கங்கள் ஆகியவை YSS ஆசிரமங்கள், கேந்திரங்கள் மற்றும் மண்டலிகளில் நடைபெறாது. அதற்கு பதிலாக, மார்ச் 7 மற்றும் 9 ஆம் தேதிகளில் நினைவு தியானங்கள் yssi.org/live இலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்படும்.
- மார்ச் 2020 இல் திட்டமிடப்பட்டபொதுமக்களுக்கான அனைத்து சன்னியாசச் சுற்றுப்பயணங்களும், பொதுப் உரைகள் உட்பட, ரத்து செய்யப்பட்டுள்ளன. இவ்விழாவில் கலந்து கொள்ள திட்டமிடுகின்ற அனைத்து பக்தர்கள் மற்றும் நண்பர்களுக்கும் இதைத் தெரிவிக்கவும்.
- ராஞ்சி, நொய்டா, தக்ஷினேஸ்வர் மற்றும் இகத்புரியில் மார்ச் 2020 இல் திட்டமிடப்பட்ட சாதனா சங்கங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகளில் பதிவு செய்த பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும்; அவர்கள் மற்றொரு சாதனா சங்கத்திற்கு (ஜூலை அல்லது அதற்குப் பிறகு) மாற்றத் தேர்வு செய்யலாம் அல்லது அவர்களின் பதிவுக் கட்டணத்தைத் திரும்பப் பெறக் கோரலாம். நாங்கள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து ஏப்ரலில் நடைபெறவிருக்கும் சாதனா சங்கங்கள் குறித்து தகுந்த முடிவு எடுப்போம். ஏப்ரல் மாதம் நடைபெறும் சாதனா சங்கமத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ள பக்தர்கள், மறு அறிவிப்பு வரும் வரை தங்களது பயணத் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
- 2020 மார்ச் மாதத்தில் YSS ஆசிரமங்கள் மற்றும் அகஓய்வு தியான மையங்களுக்குச் சென்று தங்குவதற்கு பக்தர்கள் மேற்கொண்ட பயணத் திட்டங்களை ரத்துசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.